தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நன்மை அதிகரிக்க வழி

நன்மை அதிகரிக்க வழி

நன்மை அதிகரிக்க வழி


ADDED : ஜன 10, 2013 02:01 PM

Google News

ADDED : ஜன 10, 2013 02:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உணவளிப்பதும், அறிந்தவரோ அறியாதவரோ கண்டவுடன் ஸலாம் கூறுவதும் மிகச் சிறந்த செயலாகும்.

* ஸலாமைக் கொண்டு முந்துபவன் பெருமையை விட்டும் நீங்கிக் கொண்டவனாகின்றான்.

* உங்களில் இறைவனுக்கு மிகவும் நெருங்கியவர், முதல் முறையாக ஸலாம் கூறுபவராகும்.

* பாவமன்னிப்பைப் பெறுவதிலும், அல்லாஹ்வின் அருளைப் பெறுவதிலும் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருங்கி இருப்பவர் முதலாவதாக ஸலாம் சொல்பவரே.

* நீர் வீட்டில் நுழைந்தால் உமது மனைவிக்கு ஸலாம் சொல்வீராக!

* தர்மம் செய்வதில் பத்து நன்மை தான் கிடைக்கும். ஆனால், கடன் கொடுப்பதால் பதினெட்டு நன்மை கிடைக்கின்றது.

* மறுமையின் காரியங்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிதானம் சிறப்பைத் தரும்.

* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us